Sunday, August 12, 2018

கும்மியாட்டாம்


கும்மியாட்டாம்
கும்மி
இந்த ஆட்டத்தைச் சுட்டுவதற்கு கும்மி’ (கும்மி கொட்டுதல்) என்ற சொல் கை கொட்டுதல்என்று பொருள்படும். கற்றவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. கும்முதல் என்ற சொல்லோடு தொடர்புடையது இது கும்மி கொட்டுதல்என்ற சொல் கும்மி இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.
கும்மியடிக்கும் முறை பற்றி குறிப்பிடுகையில்,
மெல்ல நடந்து நடந்து அடித்தல்
நடந்து நின்று அடித்தல்
குனிந்து நிமிந்து அடித்தல்
குதித்துக் குதித்து அடித்தல்
தன் கையைக் கொட்டி அடித்தல்
எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல்ஆகிய ஆறு நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது என்கிறார்.கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. இந்தக் கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளைப் பற்றிய பாடலைப் பாடிக் கும்மியடித்து ஆடுகின்றனர்.
Image result for கும்மியாட்டம்
எனது பார்வை
ராவத்தாள்
நெற்குப்பையில் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார்.


மாசி மாதம்மாசி மகம்  முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாக குளங்களில் மண்ணை எடுத்து வந்து கோயில்கள் முன்பாக கட்டபடும்.இதனை மச்சு என்று அழைக்கபடும்.இந்த மச்சு சுற்றியும் கட்டு கட்டபடும்.இந்த கட்டுகுள் வரகு,கேப்பை,சோழம்,பயறு வகைகள்,நெல் அனைத்தும் சிறிதளவு இருக்கும் மச்சு என்று அழைக்கபடும் அதுக்குள் இருக்கும்.ராவத்தாள் கிழவன் கிழவி என்ற மண்ணில் செய்யபட்ட பொம்மை  வைத்துகொண்டும் குண்டுமணிகளையும் கொண்டு கும்மியாட்டாம் கூட்டமாகவோ அல்லது வட்டமாக ஆடுவார்கள்.இதில் முன்று கட்டமாக பாட்டு பாடி கொண்டு ஆடுவார்கள்.
இதில்  கும்மி.யாட்டாம் முடிந்த உடன் அதில் பாடியவர்கள் பலகாரம் ஓருவர் கொருவர் கொடுத்து கொள்வர்கள்.ஓன்பது நாள் முடிக்கும் தொடர்ச்சியாக இரவு கும்மியாட்டம் முடிந்தவுடன் பலகாரம் கும்மி.யாட்டாம் கொட்டியவர்களும் அங்கு இருப்பர்களுக்கு வழங்கபடும்.ஓன்பது நாள்அன்று மாசி மகம் அன்று உலக புகழ் பெற்ற  சிவகங்கை மாவட்டம் அரளிபறையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு வாங்கி வந்த பொருட்களை ஏலம் விடுவார்கள்.அதனை ஏரளமான ஏலம் கேட்பார்கள்.பத்தம் நாள் காலை மச்சு என்று அழைக்கபடும் அதனை குளங்களில் கரைத்துவிடுவார்கள் அன்று இரவு  .காய்ச்சி வைத்த பாலினை ஓருவர் கொருவர் கொடுத்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment

ராவத்தாள

ராவத்தாள் நெற்குப்பையில் மாசி மாதம் கொண்டபடும் திருவிழா ராவத்தாள் இதனை கும்மியாட்டம் என்று அழைப்பார் . மாசி மாதம் மாசிமகம் ...